Sunday 25 September 2011

காதலால் சுட்ட வடு







எத்தனை நாள் காத்திருந்தாய்
இப்படி என்னைச் செய்துவிட

என்னால் முடியவில்லை
உன்னால் வந்த வேதனையில்
இருந்து இன்னும் மீண்டுவர

உனக்கு வெளிச்சம் வேண்டுமென்றால்
விளக்குத் திரியையெல்லோ எரிக்கவேண்டும்
எவர் உனக்குச் சொன்னார் என்று
என்னையே நீ எரித்துவிட்டாய்


நீயாகச் சொன்னாயே என்னில்
சொர்க்கங்கள் என்று
கூசாமல் தந்தாயே எண்ணி
முத்தங்கள் அன்று


எங்கே உயிர் காதலனாய்
என்னை நீ கண்டாயோ
எப்போது உன் எண்ணங்களை
நானிசை மீட்டியதைக் கேட்டாயோ


ஓரமாக இருந்த என்னை
ஆடச்சொல்லி அழைத்துவிட்டு
மேடையிலே இருந்து என்னை
பாதியிலே தள்ளிவிட்டாய்


அடியே,
காதல் உனக்கு ஒரு பொழுதுபோக்கு
ஆனால் எனக்கோ
என் வாழ்க்கையே போச்சு.

No comments:

Post a Comment