Thursday 29 September 2011

ஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்








நீ இனி காற்றாக மாறியும் பயனில்லை
காரணம் சுவாசிப்பதற்கு நான் உயிரோடு இல்லை

நான் குயிலானேன் நீ குரல் தரவில்லை
நான் செவிடானேன் நீ கூவுகின்ற வேளை

நான் உன்னை மட்டும் நேசிக்கவில்லை
நீ சுவாசித்த காற்றைக்கூட காதலித்தேன்

அடங்கிய அலையில் நுரைகள் மிச்சம்
தொடங்கிய காதலில் கவிதைகள் மிச்சம்

விலகி நான் வந்தபோதும் விட்டுவிடவில்லை உன் நினைவை
அழகி படம் பார்த்து விட்டு அழுது விட்டேன் இது உண்மை

தீண்டிய நொடியினில் வாடிய செடியான நம் காதல்
ஆண்டவன் கிறுக்கிய அழகான பொய் தானோ?

2 comments:

renoshan said...

nice1..really liked it... keep goin..waiting for more..

Anonymous said...

கவிதை நன்று நண்பரே...

Post a Comment