Tuesday 22 November 2011

மச்சாளை விடு தூதாய்!!!!



ஹாய் மச்சாள் ஹாய் மச்சாள்
எப்படி சுகம்
வீட்டிலயும் அம்மா அப்பா 
எப்படி சுகம்
            அக்கா எங்கே ரெண்டு நாளாய் காணலியே
            வெள்ளிக் கிழமை கோயிலுக்கும் வரவில்லையே
            அவளை நான் காணத நாட்களிலே
            அரைவாசியாய் தேய்ந்து போறேன் நிலாப் போலே
            எங்கே அவள் என்னவள்
            நீ சொல்லிப் போவாயா......
                           (ஹாய் மச்சாள் ஹாய் மச்சாள்.....

அக்காவிடம் சொல்லிவை
அத்தான் ரொம்ப நல்லம் என்று – அவள்
அடிக்கடி என்னை முறைக்கிறாள்
அது வேண்டாம் என்று
கடிதம் கடிதமாய் எழுதினேன் - தூங்காமலே
அதை கிழித்துப்போட்டு எறிகிறாள் படிக்காமலே
நாயென்று ஒருநாள் என்னைப் பேசிவிட்டாள்
அது கூடப் பறவாயில்லை பொறுத்துக்கொண்டேன்
அப்பாவிடம் சொல்வேன் என்று மிரட்டிவிட்டாள்
அது கேட்ட நாள் முதலாய் தூக்கமில்லை
உனக்குமா என்னைப் பார்க்க பாவமாயில்லை
ஹெல்ப் பண்ணு உன்னை விட்டால் யாருமேயில்லை
                    (ஹாய் மச்சாள் ஹாய் மச்சாள்......
 
அவளேட ஸ்கூல்பாக்கின் நுனியில் ஒன்றை
நோகாமல் பிடுங்கி நான் வைத்திருக்கேன்
மை முடிந்து அவளெறிந்த பேனா ஒன்றை
ஆசையோடு எடுத்து நான் வைத்திருக்கேன்
அவளைத் தவிர வேறொருத்தியை நினைத்ததில்லை
அவள் என்னவென்றால் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை
கவிதை எல்லாம் அவளைப் பற்றி எழுதித் தந்தேன்
கண்டபடி எனைப்பிடித்துப் பேசிவிட்டாள்
சீதனமாய் ஒரு சதமும் வாங்க மாட்டேன்
கல்யாணச் செலவைக்கூட நானே தான் பார்த்துக்கொள்வேன்
அவள் இல்லாமல் நானினிமேல் வாழமாட்டேன்
எங்களை சேர்த்துவை உன்னை நான் மறக்கமாட்டேன்
                          (ஹாய் மச்சாள் ஹாய் மச்சாள்......



ஹா...ஹா...ஹா,
எப்புடீ?

No comments:

Post a Comment