Saturday 30 November 2013

சிரிப்பினில் எரித்தவள்







55 கிலோ எடையில் ஒரு பூ
ஆடையில் போனது வீதியில்
அந்த இடையோடு சேர்ந்து என்
உயிரும் போனது காணாமல்

திட்டான திடலான ஒழுங்கையில் போன
வண்டிலைப்போல் குலங்கியது என் இதயம்
வளைந்து ஓடிய மழை வெள்ளமென
நடந்து போகிறாள் நளினமாய்

என்னை விழுங்கிய அந்தப் பார்வையில் தான்
எத்தனை அர்த்தங்கள்
எத்தனை கண்களைக் கடந்திருக்கிறேன்
இது என்ன இப்படித் தின்கிறதே
அவளுக்குப் போட்ட பூசைக்கு
நான் தானா பலி

திரும்பிப் பார்த்தாள் தெறித்தது மின்னல்
தூக்கிப் போட்டாள் பின்னலைப் பின்னால்
வலித்திருக்குமோ முதுகு?
அவள் என்னை கடந்து போன அந்த கணத்தில்
உணர்ச்சி அற்றுப் போயிருந்தேன் பிணமாய்

நிலவு கூட அழகாய்த்தான் இருந்தது
அவள் முகத்தைப் பார்க்கும் வரை
எங்கோ அவளைப் பார்த்தது போலத்தான் இருக்கிறது
ஆனால் எந்தத் தோட்டத்தில் எந்தச் செடியில்
என்று தான் நினைவிலில்லை

சிரித்து விட்டுத்தான் போகிறாள்
என்று இருந்து விட்டேன்
பின்பு தான் புரிந்தது
என்னை எரித்து விட்டுப்
போனாள் என்று.



No comments:

Post a Comment